கோவை உக்கடம் மீன் மார்க்கெட்டில் 103.5 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்

கோவை உக்கடம் மீன் மார்க்கெட்டில் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் 103.5 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. 9 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்படவுள்ளது.


கோவை: கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார்பாடி உத்தரவின் பேரில், உணவுப் பாதுகாப்பு துறை மற்றும் மீன் வளர்ச்சி துறை அதிகாரிகள் அடங்கிய 6 குழுக்கள் உக்கடம் பகுதியில் உள்ள மீன் மார்க்கெட்டுகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டன.

உக்கடம் லாரி பேட்டை பகுதியில் உள்ள 35 மொத்த மீன் விற்பனை கடைகள் மற்றும் செல்வபுரம் பைபாஸ் சாலையில் உள்ள உக்கடம் சில்லறை மீன் மார்க்கெட் பகுதியில் உள்ள 16 கடைகள் என மொத்தம் 51 கடைகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.



இந்த திடீர் சோதனையின் போது, மொத்த மீன் விற்பனை கடைகளில் 5 கடைகளில் சுமார் 65 கிலோ அளவிலான கெட்டுப்போன மீன்களும், 4 சில்லறை மீன் விற்பனை கடைகளில் சுமார் 38.05 கிலோ கெட்டுப்போன மீன்களும் கண்டுபிடிக்கப்பட்டன. மொத்தம் 103.5 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. இவற்றின் மொத்த சந்தை மதிப்பு சுமார் ரூ.50,150 ஆகும்.

கெட்டுப்போன மீன்களை விற்பனைக்கு வைத்திருந்த 9 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இது போன்று கெட்டுப்போன மற்றும் பழைய மீன்களை விற்பனை செய்பவர்கள் மீது உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் இது போன்ற திடீர் ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

பொதுமக்கள் இது போன்ற குறைபாடுகளை கண்டறிந்தால், உணவுப் பாதுகாப்பு துறையின் வாட்ஸ்அப் எண் 9444042322-க்கு தகவல் தெரிவிக்கலாம். மேலும், Google Play Store-இல் கிடைக்கும் 'tnfoodsafetyconsumer' என்ற செயலியை பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...