கோவையில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக 25 வழக்குகள் பதிவு; இரண்டு ஆம்னி பஸ் ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை

கோவையில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இரண்டு ஆம்னி பஸ் ஓட்டுநர்கள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்ட முயன்றதாக கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாநகர காவல் துறை செப்டம்பர் 2 அன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

கோவை மாநகரிலிருந்து சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், திருவனந்தபுரம் போன்ற மாநில தலைநகரங்களுக்கும், தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் செல்லும் ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுகிறார்களா என்பதை கண்டறிய சோதனை நடத்தப்பட்டது.

செப்டம்பர் 1, 2024 அன்று மாலை முதல் நடத்தப்பட்ட இந்த சோதனையில், கோவையிலிருந்து வெளியூர்களுக்கு செல்லும் 95 ஆம்னி பேருந்துகளின் ஓட்டுநர்கள் சோதனை செய்யப்பட்டனர். இதில் இரண்டு பேருந்து ஓட்டுநர்கள் மது அருந்திவிட்டு ஆம்னி பேருந்தை இயக்க முயன்றது கண்டறியப்பட்டது. உடனடியாக அந்த பேருந்துகளின் உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மாற்று ஓட்டுநர்களை ஏற்பாடு செய்து பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும், பேருந்து ஓட்டுநர்கள் மது அருந்தவில்லை என்பதை உறுதிப்படுத்திய பிறகே பேருந்துகளை இயக்க அனுமதிக்க வேண்டும் என ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அதே நாள் இரவு, கோவை மாநகர போக்குவரத்து காவல் நிலையங்களில் பணியாற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களைக் கொண்டு 17 குழுக்கள் அமைக்கப்பட்டு, கோவை மாநகரில் சிறப்பு வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில், 5 உயர்தர கார்கள், 4 உயர்தர இருசக்கர வாகனங்கள் உட்பட குடிபோதையில் வாகனங்களை இயக்கிய குற்றத்திற்காக மொத்தம் 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...