சூலூர் அருகே இருசக்கர வாகனத்தில் அரிய வகை மண்ணுளிப் பாம்பு மீட்பு

கோவை சூலூர் அருகே பாப்பம்பட்டி பிரிவில் ஒரு இருசக்கர வாகனத்தில் அரிய வகை மண்ணுளிப் பாம்பு கண்டுபிடிக்கப்பட்டது. பாம்பு பிடி வீரர் சஜீஸ் பாம்பை மீட்டு காட்டில் விடுவிக்க உள்ளார்.



கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே பாப்பம்பட்டி பிரிவில் ஒரு போட்டோ ஸ்டுடியோ முன்பு சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் அரிய வகை மண்ணுளிப் பாம்பு கண்டுபிடிக்கப்பட்டது.

தினேஷ் என்பவர் தனது வாகனத்தில் பெட்ரோல் உள்ளதா என்று பார்க்க ஸ்கூட்டரின் டேங்கைத் திறந்த போது அங்கு பாம்பு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அங்கு கூடிய மக்கள் அருகில் இருந்த பாம்பு பிடி வீரர் சஜீஸுக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சஜீஸ், இருசக்கர வாகனத்தில் இருந்த பாம்பை லாவகமாக பிடித்தார். அவர் அந்த பாம்பு அரிய வகை மண்ணுளிப் பாம்பு என்று தெரிவித்தார். இந்த வகை பாம்பின் வால் பகுதியும் தலை போன்று இருப்பதால், இரண்டு தலை உள்ள பாம்பு என்றும் அழைக்கப்படுகிறது என்றார்.

மேலும், இந்த பாம்பு விஷத்தன்மை அற்றது என்றும், மருத்துவ நோக்கங்களுக்காக சிலர் இதை அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும் சஜீஸ் விளக்கினார். பிடிபட்ட மண்ணுளிப் பாம்பை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட அடர்ந்த காட்டில் விடுவிக்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...