கோவை வெள்ளக்கிணறு அரசு பள்ளியில் வெளிமாநில மாணவர்களுக்கு சீருடை மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன

கோவை வெள்ளக்கிணறு அரசு ஆரம்ப பள்ளியில் வெளிமாநில மாணவர்களுக்கு சீருடைகள், நோட்டு புத்தகங்கள் மற்றும் பிற கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், மாநகராட்சி மேயர் ரங்கநாயகி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


கோவை: கோவை வெள்ளக்கிணறு அரசு ஆரம்ப பள்ளியில் படிக்கும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு சீருடைகள், நோட்டு புத்தகங்கள் மற்றும் பிற கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (செப்டம்பர் 2) நடைபெற்றது.



இந்த நிகழ்வில், மாணவர்களுக்கு சீருடைகள், நோட்டு புத்தகங்கள், பென்சில், எரைசர், ஷார்ப்னர், தண்ணீர் பாட்டில் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி, மற்றும் மாநகராட்சி மேயர் ரங்கநாயகி ஆகியோர் இந்த உபகரணங்களை மாணவர்களுக்கு வழங்கினர்.

இந்த விழாவில் பகுதி செயலாளர் அருள்குமார், மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த முயற்சி வெளிமாநில மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...