கோவை பூம்புகார் விற்பனை நிலையத்தில் விநாயகர் சதுர்த்தி சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை

கோவை பெரிய கடைவீதியில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் விநாயகர் சதுர்த்தி சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை செப்டம்பர் 2 முதல் 12 வரை நடைபெறுகிறது. பல்வேறு வகையான விநாயகர் சிலைகள் 10% தள்ளுபடியுடன் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.


கோவை: கோவை பெரிய கடைவீதியில் இயங்கி வரும் பூம்புகار் கைவினை பொருட்கள் விற்பனை நிலையத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெறவுள்ளது. இந்த கண்காட்சி செப்டம்பர் 2 முதல் 12 வரை, தினசரி காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும்.



இந்த கண்காட்சியில் பல்வேறு வகையான விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.



இவற்றில் பஞ்சலோகம், பித்தளை, சந்தனமரம், கருப்பு மற்றும் வெள்ளை உலோகம் ஆகியவற்றால் செய்யப்பட்ட சிலைகள் அடங்கும்.



மேலும், தஞ்சை ஓவியங்கள், காகிதக்கூழ் மற்றும் களிமண் பொம்மைகள், நூக்கமர உட்பதிப்பு வேலைப்பாடு, துணியில் வரைந்த ஓவியங்கள் போன்றவையும் இடம்பெற்றுள்ளன.



கண்காட்சியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள அனைத்து விநாயகர் சிலைகளுக்கும் 10% தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த கண்காட்சியில் 10 லட்சம் ரூபாய் வரை விற்பனை எதிர்பார்க்கப்படுவதாக பூம்புகார் விற்பனை நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...