கோவை வார்டு 2-ல் நடைபாதை மற்றும் சிறுவர் பூங்கா திறப்பு: எம்பி கணபதி ராஜ்குமார் திறந்து வைத்தார்

கோவை வார்டு 2-ல் ரூ.14.90 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட நடைபாதை மற்றும் சிறுவர் பூங்காவை எம்பி கணபதி ராஜ்குமார் திறந்து வைத்தார். மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் முன்னிலையில் நிகழ்வு நடைபெற்றது.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண் 2-க்குட்பட்ட வெள்ளக்கிணறு பிரிவு, குமாரசாமி அவென்யூ பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.14.90 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட நடைபாதை மற்றும் சிறுவர் பூங்காவினை கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் கணபதி ராஜ்குமார் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். திறப்பு விழாவின் போது எம்பி கணபதி ராஜ்குமார் மரக்கன்று நட்டு வைத்தார்.



நிகழ்ச்சியில் துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், முன்னாள் தொண்டாமுத்தூர் பேரூராட்சி தலைவர் ரவி, வடக்கு மண்டல தலைவர் வே.கதிர்வேல் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், மாமன்ற உறுப்பினர்களான கற்பகம், புஷ்பமணி, சித்ரா தங்கவேல், சாந்தாமணி ஆகியோரும் பங்கேற்றனர்.



மாநகராட்சி அதிகாரிகளான உதவி ஆணையர் ஸ்ரீதேவி, உதவி செயற்பொறியாளர் எழில், உதவி பொறியாளர் ஜெயின்ராஜ் உள்ளிட்டோரும் இந்த திறப்பு விழாவில் கலந்து கொண்டனர். இந்த புதிய நடைபாதை மற்றும் சிறுவர் பூங்கா அப்பகுதி மக்களுக்கு பெரிதும் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...