கோவை தடாகம் அருகே காட்டு யானை தாக்குதல்: வீடு சேதம், மாட்டு தீவனம் சூறையாடல்

கோவை தடாகம் அருகே காட்டு யானை ஒன்று வீட்டை சேதப்படுத்தி, மாட்டு தீவனங்களை உண்டதாக புகார். விவசாயிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.


Coimbatore: கோவை சின்ன தடாகம் பகுதியில் காட்டு யானை ஒன்று வீட்டை சேதப்படுத்தி, மாட்டு தீவனங்களை உண்டு சென்றதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேற்கு தொடர்ச்சி மலையில் நிலவிய கடும் வறட்சியின் காரணமாக உணவு, தண்ணீர் தேடி வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து பொது மக்களுக்கும், விவசாய நிலங்களில் பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. மனிதர்களின் உணவுகளை உண்டு பழகிய காட்டு யானைகள் வறட்சி நிலை மாறிய பிறகும் வனப்பகுதிகளுக்குள் செல்லாமல் தொடர்ந்து விவசாயத் தோட்டங்களுக்குள் புகுந்து சேதம் விளைவித்து வருகின்றன.



இந்நிலையில், செப்டம்பர் 1 அதிகாலை சின்ன தடாகம் பகுதியில் உள்ள வடவள்ளிக்காரர் என்ற சண்முகம் என்பவரின் தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியை சேதப்படுத்தி ஒரு காட்டு யானை உள்ளே நுழைந்துள்ளது. பின்னர் அவர்கள் குடியிருக்கும் வீட்டிற்குள் சென்று மேற்கூரைகளை சேதப்படுத்தி, அங்கு மாடுகளுக்கு வைக்கப்பட்டிருந்த தீவனங்களை தின்று, தூக்கி வீசி சூறையாடி சென்றுள்ளது.

மேலும், அப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோளம் பயிர்களுக்கும் சேதம் விளைவித்துள்ளது. இச்சம்பவம் குறித்து விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அரசு மற்றும் வனத் துறையினர் யானைகள் மேலும் சேதத்தை ஏற்படுத்தாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஏற்கனவே ஏற்பட்ட சேதத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 10ஆம் தேதி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள பரம்பிக்குளம், சோலையாறு மற்றும் ஆழியார் அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் படிப்படியா...

கோவையில் தேசிய கால்பந்து வீரர்களுக்கு பயிற்சியாளர் வாய்ப்பு - விண்ணப்பிக்க அழைப்பு

Coimbatore மாவட்ட நேரு விளையாட்டரங்கத்தில் Khelo India திட்டத்தின் கீழ் கால்பந்து பயிற்சி மையத்திற்கு தேசிய அளவில் பதக்க...

கோவையில் முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைகேட்பு மற்றும் தொழில் வாய்ப்பு கருத்தரங்கம்

கோவையில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான சிறப்பு குறைகேட்பு கூட்டம் ஜூலை 17 அன்று நடைபெறுகிறது...

கோவையில் பகுதி நேர வேலை தேடி சென்ற கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட வழக்கு; தவெகவினர் 3 பேர் கைது

கோவை பேரூர் அருகே வேலை தேடி உணவகத்திற்குச் சென்ற கல்லூரி மாணவரை, பார்சல் கட்டித் தர மறுத்ததாகக் கூறி தாக்கிய வழக்கில், த...

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...