உடுமலை அரசு மருத்துவமனையில் விபத்தில் காயமடைந்தவர்களை சந்தித்த எம்பி ஈஸ்வரசாமி

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சரக்கு வாகன விபத்தில் 19 பேர் காயமடைந்த நிலையில், பொள்ளாச்சி எம்பி ஈஸ்வரசாமி அவர்களை உடுமலை அரசு மருத்துவமனையில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே வாளவாடி செல்லும் வழியில் சரக்கு வாகனம் தலைகீழாக கவிழ்ந்த விபத்தில் 19 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் தற்போது உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், இன்று பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி உடுமலை அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று, விபத்தில் காயமடைந்தவர்களை சந்தித்து அவர்களின் உடல்நிலை குறித்து விசாரித்தார். மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று கூறி, அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களிடம் கேட்டுக் கொண்டார்.

எம்பி ஈஸ்வரசாமியுடன், ஒன்றிய நகர செயலாளர்கள், திமுக நிர்வாகிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஆகியோரும் மருத்துவமனைக்கு வருகை தந்தனர். இந்த சந்திப்பின் போது, காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கும் எம்பி ஆறுதல் கூறினார்.

விபத்து குறித்த விசாரணை நடந்து வருவதாகவும், காயமடைந்தவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இது போன்ற விபத்துக்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...