உடுமலை நகர பாஜகவில் உறுப்பினர் சேர்க்கை முகாம்: 500க்கும் மேற்பட்ட படிவங்கள் வழங்கப்பட்டன

உடுமலை நகர பாஜக சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. 500க்கும் மேற்பட்ட உறுப்பினர் சேர்க்கை படிவங்கள் பூத் கமிட்டி தலைவர்கள் மற்றும் சார்பு அணி தலைவர்களுக்கு வழங்கப்பட்டன.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நகர பாரதிய ஜனதா கட்சி (பாஜக) சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்த முகாம் கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை உத்தரவின் பேரிலும், திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மங்களம் ரவி அறிவுறுத்தலின் படியும் ஏற்பாடு செய்யப்பட்டது.



உடுமலை நகர பாஜக தலைவர் கண்ணாயிரம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நகர பொதுச்செயலாளர்கள் தம்பிதுரை மற்றும் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



கூட்டத்தில் உடுமலை நகர மண்டல பொறுப்பாளரும் மாவட்ட பொதுச் செயலாளருமான வடுகநாதன், மற்றும் உடுமலை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளரும் மாநில விவசாய அணி செயலாளருமான மௌனகுருசாமி ஆகியோர் உறுப்பினர் சேர்க்கை குறித்து விரிவான விளக்கம் அளித்தனர்.



இந்நிகழ்வில் 500க்கும் மேற்பட்ட உறுப்பினர் சேர்க்கை படிவங்கள் உடுமலை நகர பாஜக பூத் கமிட்டி தலைவர்கள் மற்றும் சார்பு அணி தலைவர்களுக்கு வழங்கப்பட்டன.



உறுப்பினர் சேர்க்கை பணிகளை மேற்கொள்ள உடுமலை நகர பொறுப்பாளர்களான உமா குப்புசாமி, நாச்சியப்பன், குருசாமி, பாலசுப்பிரமணியம் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.



இந்த முக்கிய நிகழ்வில் மாவட்ட வழக்கறிஞர் பார்வையாளர் ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் கலா, மாவட்ட மகளிர் அணி பொதுச் செயலாளர் ராதிகா, நகர மகளிர் அணி தலைவர் ரதி, சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் பால்ராஜ், இளைஞர் அணி பொதுச் செயலாளர் பாலகுரு, நகர செயலாளர்கள் ஹரிகரன், முருகேசன், நகர துணைத்தலைவர் செல்வி, நகர மகளிர் அணி பொருளாளர் விஜயலட்சுமி, சக்தி கேந்திர பொறுப்பாளர்கள், பூத் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...