உடுமலை அருகே நான்கு வழிச்சாலை பகுதியில் பொள்ளாச்சி எம்பி ஆய்வு: பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதம்

உடுமலை அருகே நான்கு வழிச்சாலை பகுதியில் பொள்ளாச்சி எம்பி ஈஸ்வரசாமி ஆய்வு மேற்கொண்டார். பாலப்பம்பட்டி பஞ்சாபி தாபா சந்திப்பில் பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விபத்துகள் குறித்து புகார் அளித்தனர்.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை வழியாக பொள்ளாச்சி முதல் திண்டுக்கல் வரை நான்கு வழி சாலை அமைக்கும் பணிகள் கடந்த சில வருடங்களாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், வேடப்பட்டி நரசிங்கபுரம், பாறைமேடு, மைவாடி, போளரப்பட்டி ஆகிய தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் உள்ள குறைகளை பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி நேரில் ஆய்வு செய்தார்.

பின்னர், பாலப்பம்பட்டி பஞ்சாபி தாபா சந்திப்பில் ஆய்வின் போது 20க்கும் மேற்பட்ட பொதுமக்கள் எம்பியை சந்தித்தனர். இந்த பகுதியில் அடிக்கடி சாலை விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் தொடர்ந்து நிகழ்வதாகவும், இது குறித்து சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.



இதனால் எம்பி முன்னிலையில் அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இப்பகுதியில் தற்காலிகமாக ரவுண்டானா அமைக்கப்படும் என பொள்ளாச்சி எம்பி ஈஸ்வரசாமி பொதுமக்களிடம் உறுதியளித்தார்.

இந்த ஆய்வின் போது தேசிய நெடுஞ்சாலை துறை திட்ட இயக்குனர் நாகராஜன், உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...