உடுமலை அருகே ஆலம்பாளையம் குளத்திற்கு நீர் வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஆலம்பாளையத்தில் உள்ள பூசாரி நாயக்கன் குளத்திற்கு நீர் வழங்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். மூன்று ஆண்டுகளாக வறண்டுள்ள குளத்தால் சுற்றுப்புற கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஆலம்பாளையத்தில் 76 ஏக்கர் பரப்பளவில் பூசாரி நாயக்கன் குளம் அமைந்துள்ளது. இந்த குளம் 10 அடி நீர்மட்டமும், 24.67 மில்லியன் கன அடி கொள்ளளவும் கொண்டுள்ளது. சுற்றுப்புறத்தில் உள்ள 15க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும், பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களில் போர்வெல்களுக்கு நிலத்தடி நீர்மட்ட ஆதாரமாகவும் இந்த குளம் உள்ளது.

நேரடியாக 88.56 ஏக்கர் நிலங்களும், மறைமுகமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களும் இந்த குளத்தின் மூலம் பாசன வசதி பெற்று வருகின்றன. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, மானுப்பட்டி கிளை கால்வாயில் உள்ள 2.65 மடை வாயிலாக குளத்துக்கு நீர் வழங்கப்பட்டு வந்தது.



ஆனால், கடந்தாண்டு ஏற்பட்ட வறட்சி மற்றும் குளறுபடி காரணமாக குளத்துக்கு நீர் வழங்கப்படவில்லை. இதனால் மூன்று ஆண்டுகளாக குளம் வறண்டு காணப்படுவதோடு, சுற்றுப்புற கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீர்மட்டமும் பாதிக்கப்பட்டு, தென்னை உள்ளிட்ட நிலைப் பயிர்களும் காய்ந்து வருகின்றன.

தற்போது, பிஏபி திட்ட தொகுப்பு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. திருமூர்த்தி அணையின் தற்போதைய நீர்மட்டம் மொத்த 60 அடியில் 53.75 அடியாக உள்ளது. இந்நிலையில், பாரம்பரிய உரிமை அடிப்படையில் ஆலம்பாளையத்தில் உள்ள பூசாரி நாய்க்கன் குளத்துக்கு உடனடியாக தண்ணீர் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...