மடத்துக்குளம் அருகே அமராவதி ஆற்றங்கரையில் இளம்பெண் கொடூரமாக கொலை: போலீஸ் தீவிர விசாரணை

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே அமராவதி ஆற்றங்கரையில் 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் கை, கால், வாய் கட்டப்பட்டு நிர்வாணமாக கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள அமராவதி ஆற்றங்கரையில் இளம்பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் குறித்து கிடைத்த தகவலின் பேரில் மடத்துக்குளம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் உடல் கை, கால், வாய் கட்டப்பட்ட நிலையில் நிர்வாணமாக ரத்த வெள்ளத்தில் கிடந்தது.



உடனடியாக பிணத்தை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, கொல்லப்பட்ட பெண் யார், எந்தப் பகுதியைச் சேர்ந்தவர், எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு விடை காணும் வகையில் காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தகவல்கள் கிடைக்கப்பெற்றவுடன் தெரிவிக்கப்படும்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...