உடுமலை வனப்பகுதியில் அனுமதியின்றி நுழைந்த 12 பேருக்கு ரூ.2.40 லட்சம் அபராதம்

உடுமலை வனப்பகுதியில் முறையான அனுமதியின்றி நுழைந்த 12 பேருக்கு வனத்துறை அதிகாரிகள் ரூ.2.40 லட்சம் அபராதம் விதித்துள்ளனர். மலைவாழ் மக்கள் அழைத்துச் சென்றதாக விசாரணையில் தெரிய வந்தது.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகேயுள்ள ஆனைமலை புலிகள் காப்பகப் பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் அமைந்துள்ளன. இப்பகுதியில் கள்ளச்சாராயப் பிரச்சினை தொடர்ந்து நிலவி வருவதால், காட்டுப்பட்டி, மாவடப்பு, குழிப்பட்டி மற்றும் குருமலை குடியிருப்பு பகுதிகளில் வனத்துறையினர் தொடர் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சில நாட்களுக்கு முன், மாவடப்பு பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, வனப்பகுதியைச் சுற்றிப் பார்க்க வந்த சென்னையைச் சேர்ந்த நான்கு பேரும், திருமூர்த்திமலை இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த மூன்று பேரும் வனத்துறையின் முன் அனுமதியின்றி அத்துமீறி நுழைந்து சட்டவிரோதமாகத் தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் ஏழு பேருக்கும் தலா ரூ.20,000 வீதம் மொத்தம் ரூ.1,40,000 அபராதம் விதிக்கப்பட்டது.



இதேபோல், அதே பகுதிக்கு மாடுகள் வாங்கச் சென்ற உடுமலை தாலுகா ராவணாபுரம் மற்றும் தேவனூர்புதூரைச் சேர்ந்த ஐந்து பேரும் வனத்துறை அனுமதியின்றி சட்டவிரோதமாகத் தங்கியிருந்தது தெரியவந்தது. இவர்களுக்கும் தலா ரூ.20,000 வீதம் மொத்தம் ரூ.1,00,000 அபராதம் விதிக்கப்பட்டது.

மொத்தம் 12 நபர்களுக்கு ரூ.2,40,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரையும் மாவடப்பு மற்றும் காட்டுப்பட்டி குடியிருப்பைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் அழைத்துச் சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், மலைவாழ் குடியிருப்புகளுக்கு வனத்துறையின் முன் அனுமதியின்றி வெளிநபர்களை அழைத்துச் செல்லக்கூடாது என்றும், மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உடுமலை வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...