கோவை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் புதிய பள்ளி மேலாண்மை குழு தேர்வு

கோவை பீளமேடு மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். பள்ளியின் முன்னேற்றத்திற்கான பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Coimbatore: கோவை மாநகராட்சி பீளமேடு வார்டு எண் 26க்குட்பட்ட பயணியர் மில் ரோட்டில் உள்ள கோவை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு 2024 ஆம் ஆண்டு கூட்டம் மற்றும் புதிய உறுப்பினர் தேர்வு நடைபெற்றது.

பள்ளி தலைமை ஆசிரியர் தாமஸ் சேவியர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், 26 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சித்ரா வெள்ளியங்கிரி மற்றும் 27 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் அம்பிகா தனபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் பள்ளி மேலாண்மை குழு தலைவராக திருமதி பிரியா அவர்களும், 24 உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.



"நம் பள்ளி நம் பெருமை" என்ற கோஷத்தின் அடிப்படையில், மாதந்தோறும் பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தை சிறப்பாக நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. தனியார் பள்ளிகளை விட சிறந்த முறையில் மாணவர்களை வளர்ப்பது, 100% தேர்ச்சி பெற வைப்பது, விளையாட்டுத் துறையில் மாணவர்களை ஊக்குவிப்பது போன்ற பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



மேலும், மாதாந்திர கூட்டங்களில் அனைத்து பெற்றோர்களையும் கலந்து கொள்ள வைப்பது, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் முன்னேற்றத்தை தொடர்ந்து கண்காணிப்பது, மாணவர்களின் பொது அறிவுத் திறன்களை மேம்படுத்துவது போன்ற முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டன.



இக்கூட்டத்தில் 100க்கும் மேற்பட்ட பெற்றோர்கள், அனைத்து ஆசிரியர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர். பள்ளியின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான இந்த முயற்சி பெரும் வரவேற்பைப் பெற்றது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...