பார்த்தீனியம் மேலாண்மை: விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம்

கோவை மாவட்டம் பல்லடம் வட்டத்தில் பார்த்தீனியம் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. பார்த்தீனியம் கட்டுப்பாடு குறித்த தொழில்நுட்பங்கள் விளக்கப்பட்டன.


Coimbatore: பார்த்தீனியம் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. ஆகஸ்ட் 16 முதல் 22 வரை நடைபெறும் இந்த விழிப்புணர்வு வாரத்தின் ஒரு பகுதியாக, விவசாயிகள், பண்ணைத் தொழிலாளர்கள், மாணவர்கள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு பார்த்தீனியம் பற்றியும், அதன் தீமைகள் மற்றும் கட்டுப்பாட்டு முறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்த முகாம், மத்திய அரசின் களை மேலாண்மை ஆராய்ச்சி இயக்குநகரத்தின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த களை மேலாண்மைத் திட்டம், உழவியல் துறை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் நடத்தப்பட்டது.



ஆகஸ்ட் 21 ஆம் தேதி, பல்லடம் வட்டம் சித்தம்பலம் புதூர் கிராமத்தில் விவசாயிகளுக்கு பார்த்தீனிய மேலாண்மை குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில், பார்த்தீனியம் என்ற நச்சுக்களையை உழவியல், இரசாயன மற்றும் உயிரியல் முறைகளைப் பின்பற்றி கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும், இந்த களை பூப்பதற்கு முன் நிலத்திலிருந்து அகற்றி உரமாக்கி மண்ணின் வளத்தை மேம்படுத்தும் தொழில்நுட்பமும் விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் மூலம் எடுத்துரைக்கப்பட்டது.



இந்த விழிப்புணர்வு முகாமில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் உழவியல் துறை பேராசிரியர் மற்றும் களை மேலாண்மை முதன்மை விஞ்ஞானி முனைவர் செ. ராதாமணி, இணைப் பேராசிரியர் முனைவர் ச. பாரதி ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த முகாமின் மூலம் விவசாயிகள் பார்த்தீனியம் களையின் தீமைகளை உணர்ந்து, அதனை கட்டுப்படுத்தும் முறைகளை அறிந்து கொண்டனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...