உடுமலை வாகன ஓட்டுநர்கள் வயநாடு நிலச்சரிவு பாதிப்புக்கு ரூ.40,886 நிதியுதவி

உடுமலையில் வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் கேரளா வயநாடு நிலச்சரிவு பாதிப்புக்கு ரூ.40,886 நிதியுதவி வழங்கினர். மூன்று வாட்ஸ்அப் குழுக்கள் இணைந்து இந்த உதவியை செய்தனர்.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் சார்பில் கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு பாதிப்புக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

உடுமலையில் உள்ள ஸ்டார் டிரான்ஸ்போர்ட் வாட்ஸ்அப் குழு, TN 78 வாட்ஸ்அப் குழு, கே.எஸ்.டி வாட்ஸ்அப் குழு ஆகிய மூன்று குழுக்கள் இணைந்து இந்த நிதி உதவியை வழங்கியுள்ளன. கடந்த சில வாரங்களுக்கு முன் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என்ற கோரிக்கை வாட்ஸ்அப் குழுக்களில் எழுப்பப்பட்டது.



இதனையடுத்து, நூற்றுக்கும் மேற்பட்ட வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சார்பில் மொத்தம் ரூ.40,886 நிதி திரட்டப்பட்டது. இந்தத் தொகை கேரளா மாநில முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு உடுமலை பாரத ஸ்டேட் வங்கி மூலம் அனுப்பப்பட்டுள்ளது.



வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைவரும் நிதி உதவி அளிக்க முன்வர வேண்டும் என வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இந்த உதவி மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஓரளவு ஆறுதல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...