மத்திய அரசு பணியிடங்களில் ஆர்.எஸ்.எஸ் பின்புலம் உள்ளவர்கள் நியமனம் குறித்து வானதி சீனிவாசன் கருத்து

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், மத்திய அரசு பணியிடங்களில் ஆர்.எஸ்.எஸ் பின்புலம் உள்ளவர்களை நியமிப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்தார். மேலும், முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து கோவை தெற்கு தொகுதி திட்டப்பணிகள் குறித்து விவாதித்தார்.



கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், மத்திய அரசு பணியிடங்களில் ஆர்.எஸ்.எஸ் பின்புலம் உள்ளவர்களை நேரடியாக நியமனம் செய்வது குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்த வானதி சீனிவாசன், கோவை தெற்கு தொகுதிக்கான பல்வேறு திட்டப் பணிகள் குறித்து விவாதித்தார்.



பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) மற்றும் மத்திய அரசின் இணைச் செயலாளர்களை இடஒதுக்கீட்டைப் பின்பற்றாமல் நேரடியாக நியமிப்பது குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தார்.

வானதி சீனிவாசன் கூறுகையில், "ஒன்றிய அரசின் முக்கிய துறைகளில் திறமையானவர்களை நேரடி நியமனம் செய்கிறார்கள். இது நிரந்தர வேலையாக இல்லாமல், குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே நேரடி நியமனம் செய்யப்பட்டிருக்கிறது. இதனால் இட ஒதுக்கீடு உள்ளிட்டவை பாதிக்கப்படாது," என்றார்.

மேலும் அவர், "இந்த நாட்டின் பிரதமர், அமைச்சர்கள் என 95% பேர் ஆர்.எஸ்.எஸ் சார்ந்தவர்கள். பாஜக கட்சியின் தேசிய தலைவர்கள் அனைவருமே ஆர்.எஸ்.எஸ்-ஐ சார்ந்தவர்கள். அரசாங்கத்தையே மக்கள் ஆர்.எஸ்.எஸ் பின்னணி உள்ளவர்களிடம் ஒப்படைத்துள்ளனர். எனவே, ஆர்.எஸ்.எஸ் சார்ந்தவர்களை உள்ளே கொண்டு வருகிறார்கள் என்ற கேள்விக்கு இடமில்லை," என்று தெரிவித்தார்.

Newsletter

நீட் எதிர்ப்பு ரயில் மறியல் முயற்சி: 20-க்கும் மேற்பட்ட திராவிடத் தமிழர் கட்சியினர் கைது

நாடு முழுவதும் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக, கோவையில் திராவிடத் தமிழர் கட்சியினர் ரயில் மறி...

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...