கோவையில் 23 கடைகளில் 90 லிட்டர் காலாவதியான குளிர்பானங்கள் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் 253 கடைகளில் உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். 23 கடைகளில் காலாவதியான மற்றும் முழுமையான லேபிள் விபரம் இல்லாத 90 லிட்டர் குளிர்பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.



கோவை: கோவை மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத் துறையினர் நடத்திய திடீர் சோதனையில், 23 கடைகளில் காலாவதியான மற்றும் முழுமையான லேபிள் விபரம் இல்லாமல் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 90 லிட்டர் குளிர்பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கோவை மாவட்டத்தில் காலாவதியான குளிர்பானங்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில், உணவு பாதுகாப்புத் துறையினர் விரிவான ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வு காந்திபுரம், வ.உ.சி பூங்கா, காந்தி பார்க், ஆர்.எஸ் புரம், பீளமேடு, கணபதி, சாய்பாபா காலனி, வடவள்ளி, சுந்தராபுரம், கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர், பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் உள்ள மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர் இடங்களில் நடத்தப்பட்டது.



மொத்தம் 253 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 213 சில்லறை விற்பனை கடைகள், 22 தயாரிக்கும் நிறுவனங்கள், 18 மொத்த விற்பனையாளர்கள் அடங்கும். இந்த ஆய்வின் போது, 23 கடைகளில் காலாவதியான மற்றும் முழுமையான லேபிள் விபரங்கள் இல்லாமல் குளிர்பானங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் 90 லிட்டர் குளிர்பானங்களை பறிமுதல் செய்து, சம்பந்தப்பட்ட கடைகளுக்கு அபராதம் விதித்துள்ளனர்.

இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி கருத்து தெரிவிக்கையில், காலாவதியான குளிர்பானங்கள் விற்பனை செய்பவர்கள் மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். மேலும், பொதுமக்கள் குளிர்பானங்கள் வாங்கும் போது அவற்றின் காலாவதி தேதியை கவனமாக சரிபார்க்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...