கிணத்துக்கடவில் நியாயவிலைக் கடையை ஆய்வு செய்த பொள்ளாச்சி எம்.பி ஈஸ்வரசாமி

கோவை தெற்கு மாவட்டம் கிணத்துக்கடவில் பொள்ளாச்சி எம்.பி ஈஸ்வரசாமி நியாயவிலைக் கடையை ஆய்வு செய்தார். திமுக மாவட்ட செயலாளர் தளபதி முருகேசனும் உடனிருந்தார். வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பிரச்சாரமும் நடைபெற்றது.


கோவை: கோவை தெற்கு மாவட்டம் கிணத்துக்கடவு மேற்கு ஒன்றியம் மாஸ்திகவுண்டன்பதி நியாயவிலைக்கடையில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே. ஈஸ்வரசாமி அவர்களுடன் இணைந்து கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் அவர்கள் இன்று ஆகஸ்ட் 19 ஆம் தேதி ஆய்வு மேற்கொண்டார்.



இந்த ஆய்வின் போது திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் உடனிருந்தனர்.



இந்தியா கூட்டணி சார்பில் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஈஸ்வரசாமி எம்.பி, இன்று கோவை தெற்கு மாவட்டம், கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி, கிணத்துக்கடவு மேற்கு ஒன்றியப் பகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.





இந்த நிகழ்வில் திமுக மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இந்த ஆய்வின் போது, நியாயவிலைக் கடையின் செயல்பாடுகள், பொருட்களின் தரம் மற்றும் விநியோகம் குறித்து எம்.பி ஈஸ்வரசாமி கேள்விகள் எழுப்பினார். மேலும், பொதுமக்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...