தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் பார்த்தீனியம் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு முகாம்கள்

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 16 முதல் 22 வரை பார்த்தீனியம் விழிப்புணர்வு வாரம் அனுசரிக்கப்பட்டது. விவசாயிகள், பண்ணைத் தொழிலாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டன.


கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் பார்த்தீனியம் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு முகாம்கள் நடைபெற்றன. ஒன்றிய அரசின் களை ஆராய்ச்சி இயக்குநகரத்தின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த களை மேலாண்மைத் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 16 முதல் 22 வரை பார்த்தீனியம் விழிப்புணர்வு வாரம் அனுசரிக்கப்படுகிறது.



இந்த ஆண்டு, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் களை மேலாண்மை பிரிவு விவசாயிகள், பண்ணைத் தொழிலாளர்கள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினருக்கு விழிப்புணர்வு முகாம்களை நடத்தியது. முகாம்களின் தொடக்க நிகழ்வாக, பல்கலைக்கழகத்தின் கிழக்கு மற்றும் மத்தியப் பண்ணைகளில் பணிபுரியும் அனைத்து பண்ணைத் தொழிலாளர்களுக்கும் பார்த்தீனியம் களை மேலாண்மை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



இந்த நிகழ்ச்சியில் உழவியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் ப. பரசுராமன் முன்னிலை வகித்து பார்த்தீனியம் மேலாண்மை குறித்து சிறப்புரையாற்றினார். விழிப்புணர்வு முகாம்களில் பார்த்தீனியம் களைச் செடி, அதன் நச்சுத் தன்மையால் ஏற்படும் பாதிப்புகள், மற்றும் அவற்றை கட்டுப்படுத்தும் உழவியல், இரசாயன மற்றும் உயிரியல் முறைகள் குறித்த தகவல்கள் வழங்கப்பட்டன.



மேலும், பார்த்தீனியச் செடிகளை பூக்கும் முன் பிடுங்கி உரமாக்குதல் பற்றிய செயல் விளக்கமும் அளிக்கப்பட்டது. ஆகஸ்ட் 16 முதல் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட முகாம்களில் பேராசிரியர் மற்றும் களை மேலாண்மை பிரிவின் முதன்மை விஞ்ஞானி முனைவர் செ. ராதாமணி, இணைப்பேராசிரியர் முனைவர் ச.பாரதி ஆகியோர் பங்கேற்று நிகழ்ச்சிகளை சிறப்புற நடத்தினர்.

Newsletter

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 30ஆம் தேதி நீர்மட்ட நிலவரம் வெளியா...