மடத்துக்குளம் அருகே வழித்தட பிரச்னை: திமுகவினர் வாக்குவாதம்; விவசாயி தற்கொலை முயற்சி

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே வழித்தட பிரச்னையால் 100க்கும் மேற்பட்ட திமுகவினர் வாக்குவாதம். விவசாயி பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே மெட்ராத்தி ஊராட்சியில் வீரக்குமார் என்பவருக்கு 3.30 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்துக்கு அருகில் மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் திமுகவைச் சேர்ந்த கௌதம் ஒரு ஏக்கர் நிலம் வாங்கியுள்ளார்.

கௌதம் தனது நிலத்திற்கு செல்ல வீரக்குமாரின் இடத்தில் வழித்தடம் உள்ளதாக கூறி வருவாய் கோட்டாட்சியரிடம் மனு அளித்தார். விசாரணைக்குப் பின், வருவாய் கோட்டாட்சியர் கௌதமுக்கு வழித்தடம் ஏற்படுத்தி தர மடத்துக்குளம் வட்டாட்சியர் மற்றும் சர்வே துறைக்கு உத்தரவிட்டார்.

வீரக்குமார் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இன்று கௌதமிற்கு ஆதரவாக 100க்கும் மேற்பட்ட திமுகவினர் மடத்துக்குளம் வட்டாட்சியர் மற்றும் சர்வே துறையினருடன் வீரக்குமார் இடத்துக்கு வந்தனர். வீரகுமார் தற்பொழுது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் அவரது உறவினர்கள் ஐந்து நாள் அவகாசம் கேட்டனர். இதற்கு கௌதம் தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.





சுமார் 50க்கும் மேற்பட்ட நபர்கள் அத்துமீறி வீரகுமார் தரப்பில் உள்ள பெண்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீரென வீரக்குமார் உறவினர் கனகராஜ் என்பவர் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை ஊற்றி தற்கொலை முயற்சி செய்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் செல்வராணி என்பவரும் பூச்சிக்கொல்லி மருந்தை குடிக்க முயன்றதால் பரபரப்பு அதிகரித்தது.



சம்பவ இடத்துக்கு வந்த உடுமலை டிஎஸ்பி சுகுமாரன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். தற்சமயம் வீரக்குமார் தரப்பில் வழியாக செல்லும் வழித்தடம் எடுப்பதற்கு ஐந்து நாள் அவகாசம் வழங்கியுள்ளதாக வருவாய்த்துறை மற்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவம் மடத்துக்குளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...