கோவை: நிறுத்தப்பட்டிருந்த கார் மீது ஆம்னி வேன் மோதி விபத்து - சிசிடிவி காட்சிகள் வெளியீடு

கோவை அவினாசி சாலையில் தண்டு மாரியம்மன் கோவில் முன் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது ஆம்னி வேன் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் தம்பதியினர் சிறு காயங்களுடன் மீட்கப்பட்டனர். சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.



Coimbatore: கோவை அவினாசி சாலையில் உள்ள அருள்மிகு தண்டு மாரியம்மன் கோவில் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த கார் மீது ஆம்னி வேன் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் கடந்த 13ஆம் தேதி நடந்துள்ளது.



அவினாசி சாலை மேம்பாலத்தின் கீழே உள்ள தண்டு மாரியம்மன் கோவில் முன்பாக கேரள மாநில பதிவெண் கொண்ட மாருதி சுஸுகி ஸ்விப்ட் கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது.



அப்போது வேகமாக வந்த ஆம்னி வேன் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது மோதியது. இந்த மோதலில் ஆம்னி வேனின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்தது.



விபத்தைக் கண்ட உடனேயே அருகில் இருந்தவர்கள் ஆம்னி வேனில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சிறிது நேர முயற்சிக்குப் பிறகு, வேனில் பயணித்த கணவன் மற்றும் மனைவி ஆகியோர் சிறு காயங்களுடன் மீட்கப்பட்டனர்.

இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. இந்த காட்சிகளில் வேகமாக வந்த ஆம்னி வேன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது மோதும் காட்சி தெளிவாகப் பதிவாகியுள்ளது.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 30ஆம் தேதி நீர்மட்ட நிலவரம் வெளியா...