பொள்ளாச்சியில் டிராக்டர் பேரணி நடத்த முயன்ற விவசாயிகள் கைது

சுதந்திர தினத்தன்று பொள்ளாச்சியில் மத்திய அரசின் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து டிராக்டர் பேரணி நடத்த முயன்ற விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.



Coimbatore: பொள்ளாச்சியில் சுதந்திர தினத்தன்று மத்திய அரசின் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டிராக்டர் பேரணி நடத்தி போராட்டம் செய்ய முயன்ற விவசாயிகளை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், வேளாண் உற்பத்தி பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் சட்டம் கொண்டு வர வேண்டும், விவசாயிகளின் கடன்களை முழுமையாக நிபந்தனை இன்றி தள்ளுபடி செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சுதந்திர தினத்தன்று பொள்ளாச்சி திருவள்ளுவர் திடல் பகுதியில் டிராக்டர் பேரணி நடத்தி போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்தனர்.



இந்நிலையில், பேரணி நடத்த கொண்டு வந்த டிராக்டர்களை போலீசார் ஆங்காங்கே தடுத்து நிறுத்தினர். இதைத்தொடர்ந்து திருவள்ளுவர் திடலில் போராட்டம் நடத்த முயன்ற விவசாயிகளை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து வேனில் ஏற்றி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கைது செய்யப்பட்ட விவசாயிகள், "விவசாயிகளின் கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டம் நடத்த முயன்ற எங்களை போலீசார் அராஜகத்துடன் நடந்து கொண்டு கைது செய்வது கண்டிக்கத்தக்கது" என்று தெரிவித்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...