செந்தில்பாலாஜி ஜாமின் மனு விசாரணை ஆகஸ்ட் 20-க்கு ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமின் மனு விசாரணையை உச்சநீதிமன்றம் ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. அமலாக்கத்துறையின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமின் மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. அமலாக்கத்துறையின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், ஆகஸ்ட் 20 அன்று முதல் வழக்காக இந்த மனுவை பட்டியலிட உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

செந்தில்பாலாஜி மீதான வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை மேற்கொண்டு விசாரணை நடத்த வேண்டியுள்ளதால், ஜாமின் மனு விசாரணையை ஒத்திவைக்குமாறு கோரியிருந்தது. இந்நிலையில், அமலாக்கத்துறையின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.

Newsletter

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...