கோவை மாவட்ட புதிய எஸ்பி Dr.கார்த்திகேயன் ஐபிஎஸ் பதவியேற்பு: பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு உறுதி

கோவை மாவட்டத்தின் 43-வது காவல் கண்காணிப்பாளராக Dr.கார்த்திகேயன் ஐபிஎஸ் பதவியேற்றார். சட்டம் ஒழுங்கு, போதைப்பொருள் தடுப்பு, பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து அவர் உறுதியளித்தார்.



கோவை: கோவை மாவட்டத்தின் 43-வது காவல் கண்காணிப்பாளராக Dr.கார்த்திகேயன் ஐபிஎஸ் இன்று பதவியேற்றுக்கொண்டார்.



பல் மருத்துவராகவும் உதவி பேராசிரியராகவும் பணியாற்றிய Dr.கார்த்திகேயன், இந்திய குடிமையியல் பணிகள் தேர்வில் தேர்ச்சி பெற்று இந்திய காவல் பணியில் இணைந்தார். திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய பின்னர், தற்போது கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுள்ளார்.



பதவியேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய Dr.கார்த்திகேயன், கோவை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார். சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மோசடி, கொள்ளை உள்ளிட்ட குற்றச் சம்பவங்களை தடுப்பதற்கும், நடந்த குற்றங்களை கண்டுபிடிப்பதற்கும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

போதைப்பொருள் தடுப்பு குறித்து பேசிய அவர், போதைப்பொருள் நடமாட்டத்தை தடுப்பதற்கான தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார். இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே போதை புழக்கத்தை தடுப்பதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியளித்தார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

சாலை பாதுகாப்பு குறித்து பேசிய Dr.கார்த்திகேயன், சாலை விபத்துக்கள் நடைபெறும் பகுதிகளை ஆய்வு செய்து அதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார். பொதுமக்களின் மனுக்கள் மீது பாரபட்சமின்றி விசாரித்து விரைவான தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

கேரளாவுடனான எல்லைப் பாதுகாப்பு குறித்தும் அவர் பேசினார். சோதனை சாவடிகளில் போலீஸ் பற்றாக்குறை மற்றும் சிசிடிவி கேமராக்கள் குறித்து ஆய்வு செய்யப்படும் என்றார். மோதல் கொலைகள் நடைபெறாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், பழைய வழக்குகளின் விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் Dr.கார்த்திகேயன் தெரிவித்தார்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...