கோவை மாவட்ட புதிய எஸ்பி Dr.கார்த்திகேயன் ஐபிஎஸ் பதவியேற்பு: பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு உறுதி

கோவை மாவட்டத்தின் 43-வது காவல் கண்காணிப்பாளராக Dr.கார்த்திகேயன் ஐபிஎஸ் பதவியேற்றார். சட்டம் ஒழுங்கு, போதைப்பொருள் தடுப்பு, பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து அவர் உறுதியளித்தார்.



கோவை: கோவை மாவட்டத்தின் 43-வது காவல் கண்காணிப்பாளராக Dr.கார்த்திகேயன் ஐபிஎஸ் இன்று பதவியேற்றுக்கொண்டார்.



பல் மருத்துவராகவும் உதவி பேராசிரியராகவும் பணியாற்றிய Dr.கார்த்திகேயன், இந்திய குடிமையியல் பணிகள் தேர்வில் தேர்ச்சி பெற்று இந்திய காவல் பணியில் இணைந்தார். திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய பின்னர், தற்போது கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுள்ளார்.



பதவியேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய Dr.கார்த்திகேயன், கோவை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார். சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மோசடி, கொள்ளை உள்ளிட்ட குற்றச் சம்பவங்களை தடுப்பதற்கும், நடந்த குற்றங்களை கண்டுபிடிப்பதற்கும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

போதைப்பொருள் தடுப்பு குறித்து பேசிய அவர், போதைப்பொருள் நடமாட்டத்தை தடுப்பதற்கான தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார். இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே போதை புழக்கத்தை தடுப்பதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியளித்தார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

சாலை பாதுகாப்பு குறித்து பேசிய Dr.கார்த்திகேயன், சாலை விபத்துக்கள் நடைபெறும் பகுதிகளை ஆய்வு செய்து அதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார். பொதுமக்களின் மனுக்கள் மீது பாரபட்சமின்றி விசாரித்து விரைவான தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

கேரளாவுடனான எல்லைப் பாதுகாப்பு குறித்தும் அவர் பேசினார். சோதனை சாவடிகளில் போலீஸ் பற்றாக்குறை மற்றும் சிசிடிவி கேமராக்கள் குறித்து ஆய்வு செய்யப்படும் என்றார். மோதல் கொலைகள் நடைபெறாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், பழைய வழக்குகளின் விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் Dr.கார்த்திகேயன் தெரிவித்தார்.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்ட ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 24 நிலவர...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 21 நாள் மாணவர் அறிமுக நிகழ்ச்சி 2026 தொடக்க விழா

கோயம்புத்தூரில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான 21 நாள் மாணவர் அறிமுக நிக...

கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடி: சுற்றுவட்டார ஊர் மக்களுக்கு சுங்க விலக்கு வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் விரைவில் திறக்கப்படவுள்ள கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடியை ஒட்டியுள்ள கிராமங...

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....