உடுமலையில் நகர பாஜக சார்பில் ஆலோசனைக் கூட்டம்: மாவட்ட தலைவர் மங்களம் ரவி பங்கேற்பு

உடுமலையில் நகர பாஜக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் மங்களம் ரவி கலந்து கொண்டார். கடந்த தேர்தலில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. உடுமலை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு நகர தலைவர் கண்ணாயிரம் தலைமை வகித்தார்.

கூட்டத்தில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் உடுமலை நகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய பாஜக பூத் கமிட்டி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.



சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் மங்களம் ரவி பேசுகையில், "பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் பாஜக சுமார் 2 லட்சம் வாக்குகள் மேல் பெற்றுள்ளது. குறிப்பாக உடுமலை நகராட்சியில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி பாஜக 6,494 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்து அபார சாதனை புரிந்துள்ளது. இதற்கு நகர நிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்" என்றார்.

மேலும் அவர், "வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் அனைவரும் சிறப்பாக பணியாற்றி நகராட்சி தலைவர், நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் பல்வேறு பதவிகளை பிடிக்க வேண்டும். வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தமிழக முதல்வராக அண்ணாமலை வெற்றி பெற அனைவரும் இப்போதிலிருந்தே பாடுபட வேண்டும்" என்று வலியுறுத்தினார்.



இந்த கூட்டத்தில் மாநில துணைத் தலைவர் கனகசபாபதி, மாவட்ட பொது செயலாளர் வடுகநாதன், வர்த்தக அணி மாநில செயலாளர் கார்த்திகேயன், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் பால்ராஜ், மாவட்ட பிரச்சார அணி தலைவர் சின்ராஜ், மாவட்ட மகளிர் அணி செயலாளர் ராதிகா, நகர பொதுச் செயலாளர்கள் ஐயப்பன், சீனிவாசன், தங்கதுரை, நகர துணைத் தலைவர்கள் உமா குப்புசாமி, கணேஷ் ஆனந்த் செல்வி, கண்ணப்பன், நாச்சியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 48.07 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 29.59 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 11ஆம் தேதி நிலவரப்படி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நிலவரம்

கோவை மாவட்டத்தில் ஜூலை 11 நிலவரப்படி ஆழியாறு அணையில் 55.4 அடி, பரம்பிக்குளம் அணையில் 18.24 அடி, சோலையாறு அணையில் 91.21 அ...

கோவையில் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவுக்கு இறுதி வாய்ப்பு; ஜூலை 31-க்குள் நிறைவு செய்ய அறிவுறுத்தல்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 3.97 லட்சம் பயனாளிகள் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவு செய்யாமல் நிலுவையில் உள்ளனர். ஜூலை 31, 20...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...