வெள்ளலூர் குப்பை கிடங்கு பிரச்சினை: முதல்வர் தீர்வு காணாவிட்டால் கருப்புக்கொடி போராட்டம் - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் எச்சரிக்கை

கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கு பிரச்சினைக்கு முதல்வர் தீர்வு காணாவிட்டால் கருப்புக்கொடி போராட்டம் நடத்தப்படும் என மறுமலர்ச்சி மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஈசுவரன் எச்சரித்துள்ளார். முதல்வரின் கோவை வருகையின் போது வெள்ளலூர் குப்பை கிடங்கை பார்வையிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.


Coimbatore: கோவை மாவட்ட ஆட்சியரிடம் மறுமலர்ச்சி மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஈசுவரன் மனு அளித்துள்ளார். அதில், நாளை கோவைக்கு வருகை தரும் தமிழ்நாடு முதலமைச்சரை வெள்ளலூர் குப்பை கிடங்கையும் கைவிடப்பட்ட வெள்ளலூர் பேருந்து நிலைய கட்டிடத்தையும் பார்வையிட அழைத்து வர வேண்டும் என்று கோரியுள்ளார்.

ஈசுவரன் கூறுகையில், "நாளை கோவை வரும் தமிழ்நாடு முதலமைச்சர், கோவையின் முக்கிய பிரச்சினையான வெள்ளலூர் குப்பை கிடங்கை நேரில் வந்து பார்வையிட வேண்டும். கடந்த 20 ஆண்டுகளாக லட்சக் கணக்கான மக்களைப் பாதிப்பு உள்ளாக்கி இருக்கிற வெள்ளலூர் குப்பை கிடங்கு பிரச்சனை இன்று வரை தீர்க்கப்படாமல் உள்ளது" என்றார்.



"முதலமைச்சர் வந்தாலும் வராவிட்டாலும் உக்கடம் பாலத்தில் வாகனங்கள் ஓடும். ஆனால் வெள்ளலூர் குப்பை கிடங்கிற்கு முதலமைச்சர் வந்தால் மட்டுமே தீர்வு கிடைக்கும். கடந்த முறை முதலமைச்சர் வந்த போது உண்ணாவிரத போராட்டம் நடத்தினோம். அவசர வேலைக்காக வந்திருக்கிறார் அவரால் வர முடியாது என்று அதிகாரிகள் சொன்னதால், உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டோம்" என்று அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், "நாளை கோவை வருகிற முதலமைச்சர் வெள்ளலூர் குப்பை கிடங்கிற்கு வந்த ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுதாபத்தை தெரிவிக்க வேண்டும். இந்த பிரச்சனைக்கு தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.



இறுதியாக, "இந்த முறை வெள்ளலூர் பிரச்சினைக்கு முதலமைச்சர் தீர்வு சொல்லாவிட்டால், அடுத்த முறை முதலமைச்சர் கோவை வரும்போது கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தை நடத்துவோம்" என்று ஈசுவரன் எச்சரித்தார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...