கவி அருவியில் தடுப்பு வேலிகள் தற்காலிகமாக சீரமைக்கப்படுகின்றன

கோவை மாவட்டம் கவி அருவியில் வெள்ளப்பெருக்கால் சேதமடைந்த தடுப்பு வேலிகள் தற்போது சீரமைக்கப்படுகின்றன. சுற்றுலாப் பயணிகளுக்கான குளிக்கும் தடை தொடர்கிறது.


Coimbatore: கோவை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள குரங்கு அருவி என்றழைக்கப்படும் கவி அருவியில் தடுப்பு வேலிகளை தற்காலிகமாக சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பெய்ததன் காரணமாக கவி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் விளைவாக, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காக பொருத்தப்பட்டிருந்த தடுப்பு வேலி கம்பிகள் அடித்துச் செல்லப்பட்டன. மேலும், சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.



தற்போது, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை குறைந்ததால் அருவிக்கு நீர் வரத்து குறைந்துள்ளது. இதனால், அருவியில் தடுப்புக் கம்பிகளை தற்காலிகமாக சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. எனினும், அருவிக்கு நீர்வரத்து சீராகாததால் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை நீடிக்கிறது.

சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தடுப்பு வேலிகள் முழுமையாக சீரமைக்கப்படும் வரை மற்றும் அருவியின் நீர்வரத்து சீராகும் வரை குளிக்கும் தடை தொடரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...