உடுமலையில் உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

உடுமலையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பல்வேறு அமைப்புகள் இணைந்து நடத்திய இப்பேரணியில் அங்கன்வாடி பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. உடுமலை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்து இந்த பேரணியை நடத்தினர்.



பேரணி உடுமலை தளி ரோடு பிரிவில் தொடங்கி, மத்திய பேருந்து நிலையம் வழியாக சென்று ரயில்வே சந்திப்பு பாதையில் நிறைவடைந்தது. இப்பேரணியில் 50க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள், 40க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தனியார் கல்லூரி முதல்வர் ஜெயக்குமார் கொடி அசைத்து பேரணியை துவக்கி வைத்தார். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தீபா பேரணிக்கு தலைமை தாங்கினார். குழந்தைகள் வளர்ச்சி திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர் சந்தியப்பிரியா, எண்ணம் போல் வாழ்க்கை அமைப்பின் நிறுவனர் நெல்சன் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...