தமிழ்புதல்வன் திட்ட தொடக்க விழாவிற்கு ரூ.5.50 லட்சம் நன்கொடை

கோவையில் நடைபெறவுள்ள தமிழ்புதல்வன் திட்டத் தொடக்க விழாவிற்கு வரும் மாணவர்களின் காலை உணவுக்காக தமிழ்நாடு சுயநிதி கல்லூரிகள் சங்கம் ரூ.5.50 லட்சம் நன்கொடை வழங்கியது.


கோவை: தமிழ்நாடு சுயநிதி கலை அறிவியல் மற்றும் மேலாண்மையியல் கல்லூரிகள் சங்கம் சார்பில், தமிழ்புதல்வன் திட்டத்தின் தொடக்க விழாவிற்கு வரும் மாணவர்களின் காலை உணவுச் செலவுக்காக ரூ.5,50,000 நன்கொடை வழங்கப்பட்டது.

கோவை அரசு கலைக்கல்லூரியில் ஆகஸ்ட் 9, 2024 அன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கவுள்ள தமிழ்புதல்வன் திட்டத்தின் தொடக்க விழாவிற்கு வரும் மாணவர்களின் காலை உணவுச் செலவுக்காக இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. சங்கத்தின் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் Kranthi Kumar Pati அவர்களிடம் இந்த நன்கொடைக்கான காசோலை வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் முனைவர் என். யசோதா தேவி (செயற்குழு உறுப்பினர், பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி), ஏ.எம்.கலீல் (புரவலர், டெக்சிட்டி கலை அறிவியல் கல்லூரி), பேராசிரியர் முனைவர் அஜீத்குமார் லால் மோகன் (தலைவர், தமிழ்நாடு சுயநிதி கலை அறிவியல் மற்றும் மேலாண்மையியல் கல்லூரிகள் சங்கம்), டி.சேதுபதி (செயலர், தமிழ்நாடு சுயநிதி கலை அறிவியல் மற்றும் மேலாண்மையியல் கல்லூரிகள் சங்கம்) ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...