கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தில் பாஜக கொடியேற்றம் மற்றும் தெருமுனை பிரச்சாரம்

கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தில் பாஜக கொடியேற்றம் மற்றும் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. 2024 தேர்தல் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து, தமிழக நலன் குறித்த தீர்மானங்கள் விளக்கப்பட்டன.


கோவை: கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தில் பாரதிய ஜனதா கட்சி கோவை மாநகர் மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் நகர் மண்டல் சார்பாக பாஜக கட்சிக் கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் 2024 பாராளுமன்ற தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும், தமிழக நலன் கருதி பாரதிய ஜனதா கட்சி மாநில செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பற்றிய தெருமுனை பிரச்சாரமும் நடைபெற்றது.



கொடியேற்ற நிகழ்வைத் தொடர்ந்து, மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் கிளை பொறுப்பாளர் விமல் இல்லத்திற்கு வருகை தந்து, அங்கு மறைந்த விமலின் தந்தையின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.



பின்னர், நரசிம்மநாயக்கன்பாளையம் பேருந்து நிலையத்தில் தெருமுனைப் பிரச்சாரம் துவக்கப்பட்டது.



இந்நிகழ்ச்சியில் மண்டல் தலைவர் மகேந்திர ராஜ் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் ரமேஷ் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்வில் பல்வேறு மாநில, மாவட்ட மற்றும் மண்டல அளவிலான கட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் பிரச்சார பிரிவு மாநில செயலாளர் வி என் ராஜன், பிரச்சார பிரிவு மாநில செயலாளர் முரளிதரன், மாவட்ட பொதுச் செயலாளர் திருநாவுக்கரசு, மாவட்ட பொதுச் செயலாளர் ப்ரீத்தி லட்சுமி, மாவட்டத் துணைத் தலைவர் மகாலட்சுமி, மாவட்ட செயலாளர் யோகேஷ், மாவட்டச் செயலாளர் சௌந்தர்ராஜ், பிரச்சார பிரிவு மாவட்ட தலைவர் வேணுகோபால், மாவட்ட இளைஞர் அணி தலைவர் கிருஷ்ண பிரசாத், மாநில பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ், மண்டல் பொதுச் செயலாளர் குணசேகரன், முருகானந்தம், மண்டல் பொருளாளர் பிரதீப், மற்றும் மாநில பொறுப்பாளர்களும், மாவட்ட பொறுப்பாளர்களும், மாவட்ட அணி பிரிவு பொறுப்பாளர்களும், மண்டல் பொறுப்பாளர்களும், மண்டல் அணி பிரிவு பொறுப்பாளர்களும், மற்றும் பாரதிய ஜனதா கட்சி தொண்டர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

நரசிம்மநாயக்கன்பாளையத்தைத் தொடர்ந்து ராக்கிபாளையம், பெரியநாயக்கன்பாளையம், வீரபாண்டி பிரிவு உள்ளிட்ட பகுதிகளிலும் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இந்த பிரச்சார நிகழ்வுகளில் பாரதிய ஜனதா கட்சியின் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் குறித்து மக்களிடம் விளக்கமளிக்கப்பட்டது.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...