திருப்பூர் மாநகரின் புதிய காவல் ஆணையராக லட்சுமி ஐபிஎஸ் பொறுப்பேற்பு

திருப்பூர் மாநகரின் 16வது காவல் ஆணையராக லட்சுமி ஐபிஎஸ் பொறுப்பேற்றார். பொதுமக்கள் பாதுகாப்பு, குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாடு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என உறுதியளித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாநகரின் 16வது காவல் ஆணையராக லட்சுமி ஐபிஎஸ் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் சென்னை ஆயுதப்படை ஐஜியாக பணியாற்றி வந்தார்.

திருப்பூர் மாநகர காவல் ஆணையராக பணியாற்றி வந்த பிரவீன் குமார் அபிநவு கடந்த மாதம் சேலத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, லட்சுமி ஐபிஎஸ் புதிய காவல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.



பொறுப்பேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய லட்சுமி, திருப்பூர் மாநகரில் பொதுமக்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், "மாநகர் பகுதிகளில் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, குற்றச் செயல்களைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதேபோல், போதைப் பொருள் பயன்பாட்டைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கும் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்று உறுதியளித்தார்.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...