கோவையில் செம்மொழி பூங்கா பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்கள்; நகராட்சி, மாநகராட்சி காலிப் பணியிடங்களுக்கு விரைவில் தேர்வு

கோவையில் செம்மொழி பூங்கா பணிகளை அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி ஆய்வு செய்தனர். நகராட்சி, மாநகராட்சி காலிப் பணியிடங்களுக்கு விரைவில் தேர்வு நடத்தப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.


Coimbatore: கோவை மத்திய சிறை மைதானத்தில் நடைபெற்று வரும் செம்மொழி பூங்கா பணிகளை அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் முத்துசாமி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது கோவை மாநகராட்சி ஆணையர் M சிவகுரு பிரபாகரன், கோவை மாவட்ட ஆட்சியர் Kranthi Kumar Pati மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு, "168 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இப்பணிகள் நடைபெற்று வருகின்றன. முதலமைச்சரின் உத்தரவின்படி, வரும் டிசம்பர் மாதம் பணிகள் முடிவடைந்து திறக்கப்பட வேண்டும் என்பதற்காக இந்த ஆய்வை மேற்கொண்டோம்," என்றார்.



அமைச்சர் தொடர்ந்து பேசுகையில், "நகராட்சி, மாநகراட்சிகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் 2,500 பேருக்கு தேர்வு நடத்த உள்ளோம். இதில் 85 சதவீதம் பேருக்கு தேர்வு முறையிலும், 15 சதவீதம் பேருக்கு நேர்காணல் முறையிலும் ஆட்களைத் தேர்வு செய்ய உள்ளோம். விரைவில், பத்து நாட்களில் பொறியாளர்கள் உதவியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்," என்று தெரிவித்தார்.

கோவை மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்ட 330 தீர்மானங்கள் குறித்தும் அமைச்சர் கருத்து தெரிவித்தார். "இந்தத் தீர்மானங்களை ஆராய்ந்து, மக்களுக்குத் தேவையானவற்றிற்கு முன்னுரிமை கொடுத்து அனைத்தையும் நிறைவேற்றுவோம்," என்றார்.



கோவை மேயர் நியமனம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், "இது தொடர்பாக முதலமைச்சர் சொல்வதைத்தான் அறிவிப்போம். இது குறித்து மதியம் தெரிவிப்போம்," என முடித்துக் கொண்டார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...