ஆடிப்பெருக்கு: அமராவதி அணையில் படகு சவாரியில் சுற்றுலா பயணிகள் உற்சாகம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி அணையில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு படகு சவாரி மீண்டும் துவங்கியது. சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு சாதனங்களுடன் படகு சவாரியில் உற்சாகமாக பங்கேற்றனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணையில் ஆடிப்பெருக்கு மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு படகு சவாரி மீண்டும் துவங்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் மிகுந்த உற்சாகம் அடைந்தனர்.

காமராஜரால் 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட அமராவதி அணை, ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. குறிப்பாக விசேஷ நாட்கள் மற்றும் வார விடுமுறை நாட்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.



கடந்த சில மாதங்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்ததால் படகு சவாரி நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது நீர்வரத்து குறைந்துள்ள நிலையில், ஆடிப்பெருக்கு மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு படகு சவாரி மீண்டும் துவங்கப்பட்டுள்ளது.

சுய உதவிக் குழுக்கள் மூலம் நடத்தப்படும் இந்த படகு சவாரியில், சுற்றுலா பயணிகள் தகுந்த பாதுகாப்பு சாதனங்களுடன் பயணிக்க அனுமதிக்கப்பட்டனர். படகு சவாரி மீண்டும் துவங்கியதால் அமராவதி அணைக்கு வந்த சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...