ஆடிப்பெருக்கு: பவானி, ஆழியாறு, நொய்யல் ஆறுகளுக்கு செல்ல வேண்டாம் - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

ஆடிப்பெருக்கு திருநாளையொட்டி, தொடர் மழையால் நீரோட்டம் அதிகரித்துள்ள கோவை மாவட்டத்தின் பவானி, ஆழியாறு, நொய்யல் ஆறுகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Coimbatore: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அண்மையில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதாகத் தெரிவித்துள்ளார். குறிப்பாக, வால்பாறை, நீலகிரி, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் அவ்வப்போது கனமழையும் பெய்து வருவதால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.

மழையின் காரணத்தினால் நொய்யல், பவானி உள்ளிட்ட ஆறுகளில் நீரோட்டம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அவ்வாறான இடங்களுக்கு செல்ல வேண்டாம் என ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்நிலையில், நாளை (ஆகஸ்ட் 3) நடைபெறவுள்ள ஆடிப்பெருக்கு திருநாளை முன்னிட்டு பல்வேறு பொதுமக்கள் நீர் நிலைகளுக்கு செல்வது வழக்கம் என்றும் ஆட்சியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால் தற்பொழுது பெய்து வரும் மழையின் காரணமாக ஆறுகளில் நீரோட்டம் அதிகமாக இருப்பதால், கோவை மாவட்டத்தில் செல்லும் பவானி, நொய்யல், ஆழியாறு உள்ளிட்ட நீர் நிலைகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி வலியுறுத்தியுள்ளார். மேலும், மக்கள் தங்களது உயிர் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த எச்சரிக்கையை கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...