கொலை மிரட்டல்: பாமக மாவட்ட செயலாளர் பாதுகாப்பு கோரி காவல் ஆணையரிடம் மனு

கோவையில் MyV3 Ads மோசடி குறித்து புகார் அளித்த பாமக மாவட்ட செயலாளர் அசோக் ஸ்ரீநிதி, தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறி, பாதுகாப்பு கோரி காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளார்.


Coimbatore: கோவை மாவட்ட பாமக செயலாளர் அசோக் ஸ்ரீநிதி, தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறி, பாதுகாப்பு வழங்க கோரி கோவை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளார்.

அசோக் ஸ்ரீநிதி கூறுகையில், "கடந்த ஓராண்டு காலமாக 2000 கோடிகளுக்கு மேல் மோசடியில் ஈடுபட்ட MyV3 Ads நிறுவனத்திற்கு எதிராக புகார் அளித்து வருகிறோம். பொருளாதார குற்றப்பிரிவு விசாரணையில், MyV3 Ads நிறுவனம் 2451 கோடி முதலீடு பெற்று, ஒன்பதரை லட்சம் மக்களை ஏமாற்றியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் MyV3 Ads செயலி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது," என்றார்.



"ஆறு மாதத்திற்கு முன்பு எனக்கு கொலை மிரட்டல் வந்தது. இது குறித்து எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த ஜூலை 30ஆம் தேதி, கோவை அவிநாசி சாலையில், கூலிப்படையைச் சேர்ந்த மூன்று நபர்கள் என்னை கொலை செய்ய முயற்சித்தார்கள். அன்றே காவல்துறையில் புகார் அளித்தோம். ஆனால் இன்றுவரை யாரும் கைது செய்யப்படவில்லை," என்று அவர் தெரிவித்தார்.



"பாமக தலைவர் பாதுகாப்பு அளிக்க கோரி அறிக்கை விடுத்துள்ளார். எங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் இது குறித்து புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மோசடி செய்பவர்களுக்கும், குண்டாஸ் நடவடிக்கையில் ஈடுபடுபவர்களுக்கும், கூலிப்படையினருக்கும் பாதுகாப்பு அளிக்கிறார்கள்," என்று அசோக் ஸ்ரீநிதி குற்றம் சாட்டினார்.

இந்நிலையில், தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு அளிக்க கோரி கோவை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...