அருந்ததியர் இட ஒதுக்கீடு: உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு தமிழ்ப்புலிகள் கட்சி வரவேற்பு

கோவையில் தமிழ்ப்புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன் அருந்ததியர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்றார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்தார்.


Coimbatore: கோவை பிரஸ் கிளப்பில் தமிழ்ப்புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன் செய்தியாளர்களை சந்தித்து, அருந்ததியர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்றார்.

நாகை திருவள்ளுவன் கூறுகையில், "பட்டியல் பிரிவிற்குள் மிகவும் பின்தங்கி உள்ள அருந்ததியர் மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்கிற நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கடந்த 2009 ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் அருந்ததியர்களுக்கான சட்டம் நிறைவேற்றப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கின் இரு தரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதிகள், பட்டியல் பிரிவுக்கு உள்ளாகவே பின்தங்கியுள்ள மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கியிருப்பது செல்லும் என்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை கொடுத்திருக்கிறார்கள்" என்றார்.



"திமுகவிற்கும், உள் இட ஒதுக்கீடு வேண்டும் என்று போராடிய முற்போக்கு இயக்கங்களுக்கும், அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த இயக்கங்களுக்கும் வழக்கறிஞர்களுக்கும் கிடைத்துள்ள வெற்றியாக நாங்கள் பார்க்கிறோம்" என்று அவர் தெரிவித்தார். மேலும், "இந்த சட்டத்தை கொண்டு வந்த தலைவர் கலைஞருக்கும் இந்த சட்டம் செல்லும் என்ற நிலைக்கு வருவதற்கு உடன் இருந்த Makkaludan Mudhalvar ஸ்டாலினுக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்" என்றும் கூறினார்.

நாளை காலை தமிழக முதல்வரை சந்தித்து இது குறித்து நன்றி தெரிவிக்க இருப்பதாகவும் நாகை திருவள்ளுவன் தெரிவித்தார். அதேசமயம், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, அந்தந்த சாதியின் அடிப்படையில் பிரதிநிதித்துவ இட ஒதுக்கீடு கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்த இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...