கோவை வ.உ.சி மைதானத்தில் வாகா எல்லை அணிவகுப்பு போன்ற நிகழ்ச்சி: போலீசார் தீவிர பயிற்சி

கோவை வ.உ.சி மைதானத்தில் சுதந்திர தின விழாவில் வாகா எல்லை அணிவகுப்பு போன்ற நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்காக ஆயுதப்படை போலீசார் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.


கோவை: கோவையில் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு சுதந்திர தின விழாவில் வ.உ.சி மைதானத்தில் முதன் முறையாக வாகா எல்லையில் நடைபெறும் அணிவகுப்பை போன்ற நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.



வாகா எல்லையில் இந்திய மற்றும் பாகிஸ்தான் நாட்டு இராணுவத்தினரின் அணிவகுப்பு நடைபெறும். இந்த அணிவகுப்பு உணர்ச்சி பூர்வமிக்க நிகழ்ச்சியாக இருக்கும். அதே போன்ற அணிவகுப்பை கோவையில் நடத்த ஆயுதப்படை போலீசார் முடிவு செய்துள்ளனர்.



இந்த நிகழ்ச்சிக்கான தீவிர பயிற்சியில் கோவை மாநகர ஆயுதப்படை போலீசார் தற்போது ஆகஸ்ட் 2 முதல் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு வாகா எல்லையில் பயிற்சி பெற்ற கமாண்டோ அதிகாரிகள் பயிற்சி அளித்து வருகின்றனர்.



பொதுமக்கள் ஆகஸ்ட் 15ஆம் தேதி கோவை வ.உ.சி மைதானத்தில் நடைபெறும் சுதந்திர தினவிழா நிகழ்ச்சிக்கு வருகை புரிந்தால் இந்த சிறப்பு அணிவகுப்பு நிகழ்ச்சியை நேரில் காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...