நடுரோட்டில் பழுதான அரசு பேருந்தை தள்ளி இயக்கிய மாணவர்கள், பொதுமக்கள்

பொள்ளாச்சியில் நடுரோட்டில் பழுதடைந்த அரசு பேருந்தை மாணவர்களும் பொதுமக்களும் தள்ளி இயக்கினர். அடிக்கடி பழுதாகும் பேருந்துகளை முறையாக பராமரிக்க வேண்டும் என கோரிக்கை.


கோவை: பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட 51A எண் கொண்ட அரசு பேருந்து, திருவள்ளுவர் திடல் அருகே திடீரென பழுதடைந்து நின்றது. பேருந்து ஓட்டுநர் பல முறை முயற்சி செய்தும் பேருந்து இயங்கவில்லை.



இதனால் பேருந்தில் பயணித்த பள்ளி மாணவர்கள் மற்றும் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த காங்கிரஸ் கட்சியினர் உட்பட பலரும் பேருந்தை பின்புறமாகவும், பின்னர் முன்புறமாகவும் தள்ளினர்.



இறுதியாக பேருந்து இயங்கத் தொடங்கியது.

பொள்ளாச்சியில் இருந்து ஆனைமலை, நெகமம், பெதப்பம்பட்டி, ஆழியார் உள்ளிட்ட பகுதிகளுக்கு 50க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலான பேருந்துகள் அடிக்கடி பழுதடைவதாக புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில், அரசு போக்குவரத்துக் கழகம் பேருந்துகளை முறையாக பராமரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க, பழுதடைந்த பேருந்துகளை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...