கோவை மாவட்டத்தில் சுற்றுலா மற்றும் வனப்பகுதிகளில் ரோந்து பணி தீவிரம் - மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் தொடர் மழையால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க, சுற்றுலா மற்றும் வனப்பகுதிகளில் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அறிவித்துள்ளார். மேலும், மழைக்கால பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் விளக்கமளித்தார்.


Coimbatore: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் தொடர்பான விழிப்புணர்வு குறும்படம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலக எல்.இ.டி நடமாடும் வாகனத்தில் ஒளி பரப்பப்படுவதை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி இன்று ஆகஸ்ட் 1 ஆம் தேதி துவக்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, கோவை மாவட்டத்தில் ஜூலை 30 ஆம் தேதி முதல் மழை பெய்து வருவதாகவும், வால்பாறை மற்றும் பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் அதிகமாக மழை பெய்து வருவதாகவும் தெரிவித்தார். கோடைகாலத்தில் குளங்கள் தூர்வாரப்பட்டதால் மழைக்காலத்தில் பெரிதளவு பாதிப்புகள் ஏற்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.



வால்பாறையில் மண் சரிவால் இரண்டு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், மழை தொடர்பாக தமிழக அரசு சார்பில் பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் ஆட்சியர் தெரிவித்தார். வால்பாறையில் மேற்கொண்ட ஆய்வில், மண் சரிவு ஏற்படக்கூடிய பகுதிகள் கண்டறியப்பட்டு, தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

மேலும், அப்பகுதியில் புதிதாக கட்டப்படும் கட்டிடங்களுக்கு முறையான ஆய்வு செய்து அனுமதி வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்தார். மாநில அளவிலான பேரிடர் மேலாண்மைக் குழு வயநாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், முன்னெச்சரிக்கையாக மேட்டுப்பாளையம் மற்றும் வால்பாறையில் இக்குழுவினர் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மாவட்ட கண்காணிப்பாளராக நந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் மழை தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் ஆட்சியர் தெரிவித்தார். அபாயகரமான வீடுகளில் தங்க வேண்டாம் என்றும், சுற்றுலா பயணிகள் நீர்நிலைகள் அதிகமாக உள்ள இடங்களுக்குச் செல்ல வேண்டாம் என்றும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

கோவை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான சுற்றுலா இடங்கள் மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதியில் அமைந்துள்ளதால், அங்கு காவல்துறையினரும் வனத்துறையினரும் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் ஆட்சியர் தெரிவித்தார்.

கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்பட்டு வருவதாகவும், எந்த நேரத்திலும் மக்கள் தொடர்பு கொண்டால் உடனடியாக நிவாரணம் வழங்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி உறுதியளித்தார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...