கோவையில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த கடத்தல் குற்றவாளி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

கோவையில் ஜோசியம் பார்ப்பதாகக் கூறி கடத்தல் மற்றும் மோசடி செய்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த பினீஷ்குமார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


Coimbatore: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி உத்தரவின் பேரில், கேரள மாநிலத்தைச் சேர்ந்த கடத்தல் குற்றவாளி பினீஷ்குமார் (45) குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜூலை 31 அன்று கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

பினீஷ்குமார், கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த செந்தில்குமாருக்கு (48) ஜோசியம் பார்ப்பதாகக் கூறி கடத்திச் சென்று மோசடி செய்த குற்றத்திற்காக நெகமம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இவர் ஏற்கெனவே பல குற்றச் செயல்களில் ஈடுபட்டதும், தொடர்ந்து பொது அமைதிக்கும் சட்ட ஒழுங்குக்கும் பாதகமான செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.பத்ரிநாராயணன் பரிந்துரை செய்தார்.

இந்தப் பரிந்துரையின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, பினீஷ்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவின் பேரில் பினீஷ்குமார் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...