பொள்ளாச்சியில் முள்ளம்பன்றி வேட்டையாடிய 6 பேர் கைது: வனத்துறை நடவடிக்கை

பொள்ளாச்சி அருகே கொங்கலப்பம்பாளையத்தில் முள்ளம்பன்றியை வேட்டையாடி சமைக்க முயன்ற 6 பேரை வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


கோவை: பொள்ளாச்சி வனக்கோட்டத்திற்கு உட்பட்ட கொங்கலப்பம்பாளையம் பகுதியில் வனவிலங்கான முள்ளம்பன்றியை வேட்டையாடியதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் அடிப்படையில், கோவை மண்டல தலைமை வன பாதுகாவலர் ராமசுப்பிரமணியம் உத்தரவின் பேரில் பொள்ளாச்சி வனச்சரகர் தலைமையில் வனத்துறை வேட்டை தடுப்பு காவலர்கள் அந்தப் பகுதியில் குழுக்களாக பிரிந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

கொங்கலப்பம்பாளையம் ஆற்றுக்கரை பகுதியில் முள்ளம்பன்றியை பிடித்து சமைக்க முயன்ற அதே பகுதியைச் சேர்ந்த ஜெயபிரகாஷ், தெய்வராஜ், ரங்கசாமி, லோகேஷ், தீபன் மற்றும் மோகன்ராஜ் ஆகியோரை வனத்துறையினர் கையும் களவுமாக பிடித்தனர்.

பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் அதே பகுதியில் முள்ளம்பன்றியை வளைவைத்து பிடித்ததாக ஒப்புக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, வனவிலங்கை வேட்டையாடி சமைத்ததாக வன குற்றத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட 6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நடவடிக்கை வனவிலங்குகளைப் பாதுகாக்கும் வனத்துறையின் தீவிர முயற்சிகளை எடுத்துக்காட்டுகிறது.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...