பொள்ளாச்சியில் மாடன் ரைஸ் மில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது - எம்எல்ஏ ஜெயராமன் நேரில் ஆய்வு

பொள்ளாச்சி டீச்சர்ஸ் காலனியில் கனமழையால் மாடன் ரைஸ் மில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. அருகிலுள்ள வீடுகள் சிறிய சேதம் அடைந்தன. எம்எல்ஏ ஜெயராமன் நேரில் ஆய்வு செய்தார்.


கோவை: பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் சுவர்கள் மற்றும் வீடுகள் இடிந்து சேதமடைந்து வருகின்றன.



இந்நிலையில், பொள்ளாச்சி டீச்சர்ஸ் காலனி பகுதியில் உள்ள மாடன் ரைஸ் மில் சுற்றுச்சுவர் இன்று மாலை இடிந்து விழுந்தது. இதனால் அருகிலுள்ள வீடுகளும் சிறிய அளவில் சேதமடைந்தன. ஆனால், அதிர்ஷ்டவசமாக வீடுகளில் யாரும் இல்லாததால் பெரிய உயிர்ச்சேதம் ஏற்படவில்லை.



இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் மாடன் ரைஸ் மில் அதிகாரிகளை சந்தித்து, இடிந்து விழுந்த சுற்றுச்சுவரை மீண்டும் கட்டுவதற்கான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக பொள்ளாச்சி பகுதியில் பல இடங்களில் இது போன்ற சம்பவங்கள் நடந்து வருவதால், பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், பழுதடைந்த கட்டிடங்கள் மற்றும் சுவர்களை உடனடியாக சரி செய்யுமாறு உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...