கோவையில் வட்டாட்சியர்கள் மற்றும் துணை வட்டாட்சியர்களுக்கு இடமாற்றம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் நிர்வாக நலன் கருதி 24 வருவாய்த் துறை அதிகாரிகள் உட்பட வட்டாட்சியர்கள், துணை வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். புதிய பணியிடத்தில் உடனடியாக சேர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


Coimbatore: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி ஜூலை 30 அன்று வெளியிட்ட அறிக்கையில், கோவை மாவட்டத்தில் நிர்வாக நலன் கருதி வட்டாட்சியர்கள் மற்றும் துணை வட்டாட்சியர்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த இடமாற்றத்தின் விவரங்கள் பின்வருமாறு:

1. சரவணக்குமார் - கோவை தெற்கு வட்டாட்சியர் பதவியிலிருந்து கோவை தெற்கு (நகர்ப்புற நிலவரித் திட்டம், அலகு 1) தனி வட்டாட்சியராக நியமனம்.

2. கிருஷ்ணவேணி - கோவை தெற்கு (நகர்ப்புற நிலவரித் திட்டம், அலகு 1) தனி வட்டாட்சியர் பதவியிலிருந்து கோவை தெற்கு வருவாய் வட்டாட்சியராக நியமனம்.

3. வி.குமரி அனந்தன் - கோவை இந்து சமய அறநிலையத் துறை தனி வட்டாட்சியர் பதவியிலிருந்து அன்னூர் வருவாய் வட்டாட்சியராக மாற்றம்.

4. கல்பனா அலமேலு - ஒட்டன்சத்திரம் - திண்டுக்கல் நான்கு வழிச்சாலைத் திட்டம் (பொள்ளாச்சி அலகு) தனி வட்டாட்சியர் பதவியிலிருந்து கோவை இந்து சமய அறநிலையத் துறை தனி வட்டாட்சியராக நியமனம்.

இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் புதிய பணியிடத்தில் உடனடியாக பொறுப்பேற்க வேண்டும் என்று ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். மாறுதலை தவிர்க்கும் பொருட்டு விடுப்பில் செல்வதோ அல்லது பணியில் சேராமல் காலம் தாழ்த்துவதோ கூடாது என்றும், அவ்வாறு செய்தால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், கிணத்துக்கடவு, பேரூர் உள்ளிட்ட வட்டங்களில் துணை வட்டாட்சியர் நிலையில் பணியாற்றி வந்த 24 வருவாய்த் துறை அதிகாரிகளுக்கும் பணியிட மாற்றம் செய்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த இடமாற்றங்கள் மாவட்டத்தின் நிர்வாக செயல்திறனை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...