டிஜே நினைவு சர்வதேச புகைப்பட போட்டி 2024: பரிசளிப்பு விழா மற்றும் கண்காட்சி கோவையில் நடைபெற்றது

கோவையில் டிஜே நினைவு சர்வதேச புகைப்பட போட்டி 2024 பரிசளிப்பு விழா நடைபெற்றது. 25 நாடுகளிலிருந்து 1538 பேர் பங்கேற்றனர். புகைப்பட கண்காட்சி ஆகஸ்ட் 4 வரை நடைபெறும்.



கோவை: லட்சுமி மெஷின் ஒர்க்ஸ் லிமிடெட் (எல்.எம்.டபிள்யூ) நடத்தும் டிஜே நினைவு சர்வதேச புகைப்பட போட்டி (DJMPC) 2024-ன் பரிசளிப்பு விழா கோவையில் உள்ள கஸ்துாரி சீனிவாசன் கலாச்சார மையத்தில் 30 ஜூலை 2024 அன்று நடைபெற்றது. இந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் உலகம் முழுவதும் 25 நாடுகளிலிருந்து 1538 பேர் பங்கேற்று 6464 படங்களை சமர்ப்பித்தனர்.



போட்டிக்கான பதிவுகள் 2024 மே 1 முதல் ஜூன் 30 வரை www.djmpc.in வாயிலாக மேற்கொள்ளப்பட்டன. டெல்லியை சேர்ந்த ராஜேஷ் பேடி, சிங்கப்பூரை சேர்ந்த ஜெயினி மரியா மற்றும் ஜெயபிரகாஷ் போஜன் உள்ளிட்டோர் அடங்கிய நடுவர் குழு அமைக்கப்பட்டு தேர்வுகள் நடந்தன. கே. மருதாச்சலம் போட்டியின் ஆலோசகராகவும், விக்ரம் சத்யநாதன் நிர்வாகியாகவும் செயல்பட்டனர்.



இந்த ஆண்டு "இயற்கையின் புதுமை" மற்றும் "wild portraits" என இரு தலைப்புகளில் போட்டிகள் நடந்தன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு சிறந்த படங்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் இரண்டு பிரிவிலும் தேர்வு பட்டியலில் இடம் பெற்ற 10 பேருக்கு பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளன.

"இயற்கையின் புதுமை" பிரிவில் மும்பையைச் சேர்ந்த டாக்டர். திலிப் ஷா முதல் பரிசையும், சென்னையைச் சேர்ந்த கணபதி ராம் ஆர்.எஸ் இரண்டாம் பரிசையும் வென்றனர். "wild portraits" பிரிவில் கேரளா காயம்குளம் பகுதியைச் சேர்ந்த டாக்டர். மகேஷ் முதல் பரிசையும், கனடா நாட்டைச் சேர்ந்த தாமஸ் விஜயன் இரண்டாம் பரிசையும் வென்றனர்.



வெற்றி பெற்றவர்களுக்கு, எல்.எம்.டபிள்யு குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சஞ்சய் ஜெயவர்த்தன வேலு பரிசுத்தொகை வழங்கி கௌரவித்தார். இந்த போட்டியின் மொத்த பரிசுத் தொகை 10 லட்சம் ரூபாய் ஆகும். தொடர்ந்து, புகைப்பட கண்காட்சி ஆகஸ்ட் 4, 2024 வரை நடைபெறும்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...

அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 10ஆம் தேதி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்...