திருப்பூரில் அகில இந்திய ஓபன் ஒற்றையர் கேரம் போட்டி: வெற்றியாளர்களுக்கு பரிசு வழங்கினார் எம்எல்ஏ செல்வராஜ்

திருப்பூரில் நடைபெற்ற அகில இந்திய ஓபன் ஒற்றையர் கேரம் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும், உலக கோப்பை கேரம் போட்டியில் பங்கேற்பவர்களுக்கு ஊக்கத்தொகையையும் எம்எல்ஏ செல்வராஜ் வழங்கினார்.


Coimbatore: திருப்பூர் - பல்லடம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் அகில இந்திய ஓபன் ஒற்றையர் கேரம் போட்டிகள் நடைபெற்றன. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில், இறுதிப் போட்டியில் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த முகம்மது குப்ரான் வெற்றி பெற்றார்.

வெற்றி பெற்ற முகம்மது குப்ரானுக்கு முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாய், ஒரு பவுன் தங்க நாணயம், சுழற்கோப்பை உள்ளிட்டவை வழங்கப்பட்டன. மேலும், வரும் நவம்பர் மாதம் கலிபோர்னியாவில் நடைபெறவுள்ள உலக கோப்பை கேரம் போட்டியில் பங்கேற்கவுள்ள ஹாசிமா, மித்ரா உள்ளிட்ட மூவருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் ஊக்கத்தொகையினை எம்எல்ஏ செல்வராஜ் வழங்கினார்.



இந்த நிகழ்வில் திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் மற்றும் எம்எல்ஏ செல்வராஜ், மாநகராட்சி மேயர் திருமதி மல்லிகா, மாநகராட்சி ஆணையர் திரு. விநீத், திருப்பூர் மாவட்ட கேரம் சங்கத் தலைவர் திரு. சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்தப் போட்டியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...

கோவையில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக கருதப்பட்ட புகைப்படக் கலைஞர் வழக்கில் அதிர்ச்சி திருப்பம்; திட்டமிட்டு கொலை செய்ததாக 2 பேர் நீதிமன்றத்தில் சரண்

கோவை தடாகம் அருகே காணாமல் போன புகைப்படக் கலைஞர் பிரவீன், ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக முதலில் கருதப்பட்ட நிலையில், அவரை...

வடவள்ளியில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 40-ல் உள்ள வடவள்ளி பகுதியில் அனுமதியின்றி விளம்பர போஸ்டர்கள் ஒட்டிய தனியா...

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...