கோவையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: 26 வயது இளைஞர் கைது

கோவையில் 28 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 26 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார். பெண் கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


கோவை: கோவை அருகே உள்ள குனியமுத்தூர் பாலக்காடு மெயின் ரோட்டில் வசிக்கும் 28 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 26 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த பெண் ஏற்கனவே திருமணமானவர். ஆனால் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் உக்கடம் வின்சென்ட் ரோட்டில் உள்ள குடியிருப்பு பகுதியில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், 26 வயதான இளைஞருடன் நட்பு ஏற்பட்டது. பெண் அவரை தோழராக பழகினாலும், இளைஞர் அதை தவறாக பயன்படுத்தி நடந்து கொண்டதாக தெரிகிறது.

இதனால் வருத்தமடைந்த பெண், அவரை விட்டு விலகிச் சென்றார். ஆனால் இளைஞர் தொடர்ந்து அவரை தொலைபேசியில் அழைத்து, தன்னுடன் இருக்குமாறு வற்புறுத்தியுள்ளார். சம்பவத்தன்று, பெண் தனது தோழியுடன் பேசிக் கொண்டிருந்தபோது, இளைஞர் அங்கு சென்று அவரது கன்னத்தில் அறைந்து மிரட்டல் விடுத்துள்ளார்.

இது குறித்து பெண் உக்கடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், உதவி ஆய்வாளர் விக்னேஷ் தலைமையிலான காவல்துறையினர், இளைஞர் மீது பெண்ணை அவதூறாக பேசி, மிரட்டல் விடுத்து தொந்தரவு செய்ததாக பெண் கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து, ஜூலை 28 ஆம் தேதி இளைஞர் கைது செய்யப்பட்டார்.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...