கோவையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: 26 வயது இளைஞர் கைது

கோவையில் 28 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 26 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார். பெண் கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


கோவை: கோவை அருகே உள்ள குனியமுத்தூர் பாலக்காடு மெயின் ரோட்டில் வசிக்கும் 28 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 26 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த பெண் ஏற்கனவே திருமணமானவர். ஆனால் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் உக்கடம் வின்சென்ட் ரோட்டில் உள்ள குடியிருப்பு பகுதியில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், 26 வயதான இளைஞருடன் நட்பு ஏற்பட்டது. பெண் அவரை தோழராக பழகினாலும், இளைஞர் அதை தவறாக பயன்படுத்தி நடந்து கொண்டதாக தெரிகிறது.

இதனால் வருத்தமடைந்த பெண், அவரை விட்டு விலகிச் சென்றார். ஆனால் இளைஞர் தொடர்ந்து அவரை தொலைபேசியில் அழைத்து, தன்னுடன் இருக்குமாறு வற்புறுத்தியுள்ளார். சம்பவத்தன்று, பெண் தனது தோழியுடன் பேசிக் கொண்டிருந்தபோது, இளைஞர் அங்கு சென்று அவரது கன்னத்தில் அறைந்து மிரட்டல் விடுத்துள்ளார்.

இது குறித்து பெண் உக்கடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், உதவி ஆய்வாளர் விக்னேஷ் தலைமையிலான காவல்துறையினர், இளைஞர் மீது பெண்ணை அவதூறாக பேசி, மிரட்டல் விடுத்து தொந்தரவு செய்ததாக பெண் கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து, ஜூலை 28 ஆம் தேதி இளைஞர் கைது செய்யப்பட்டார்.

Newsletter

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...