சேலத்தில் ஆகஸ்ட் 16ஆம் தேதி எம்.பி.சி. உரிமை மீட்பு மாநாடு: 24 மணை தெலுங்கு செட்டியார் பேரவை தலைவர் அறிவிப்பு

பொள்ளாச்சியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், 24 மணை தெலுங்கு செட்டியார் பேரவை மாநில தலைவர் ஜெகநாத் மிஸ்ரா, ஆகஸ்ட் 16ஆம் தேதி சேலத்தில் எம்.பி.சி. உரிமை மீட்பு மாநாடு நடைபெறும் என அறிவித்தார்.


Coimbatore: 24 மணை தெலுங்கு செட்டியார் பேரவை சார்பில் வருகிற ஆகஸ்ட் 16ஆம் தேதி சேலத்தில் எம்.பி.சி. உரிமை மீட்பு மாநாடு நடத்தப்படுவதாக அப்பேரவையின் மாநில தலைவர் ஜெகநாத் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சி காமாட்சி அம்மன் கோவில் மண்டபத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார். இந்தக் கூட்டத்தில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை பகுதிகளைச் சேர்ந்த நகர, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



செய்தியாளர்களிடம் பேசிய ஜெகநாத் மிஸ்ரா, "சேலத்தில் நடைபெற உள்ள மாநாட்டிற்கு தமிழ்நாடு மட்டுமில்லாமல் ஆந்திரா, கர்நாடகா மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்ள உள்ளனர்," என்று தெரிவித்தார். மேலும், இந்த மாநாட்டிற்கு அனைத்து கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த மாநாடு 24 மணை தெலுங்கு செட்டியாருக்கு எம்.பி.சி உரிமை மீட்பு மாநாடாக நடத்தப்படுவதாகவும் ஜெகநாத் மிஸ்ரா உறுதிபடக் கூறினார்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...